
- தாய்வான் நாட்டில் உள்ள காவோஷியாங் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன்,புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக தெரிய வருகிறது.இந்த சிறுவன் தன் தந்தை வைத்திருக்கும் சிகரெட்டுகளை திருடி புகைப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும்,புகைப் பிடிக்கும்போது என் தந்தை நல்ல குஸியாக இருப்பார்.இதை பார்த்து தான் நானும் புகை பிடிக்க தொடங்கினேன் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில் தந்தையிடம் இருந்து திருடியவன்,பின்பு அண்ணனிடம் சிகரெட்டுகளை கடன் வாங்கத் தொடங்கியதாகவும்,அண்ணனுக்கு வயது 9.அவனும் தந்தையிடம் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும்,அண்ணனும்,தம்பியும் புகைப் பிடிப்பதை ஒருநாள் பார்த்த தந்தை,உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் மேலும் தெரிவரும் அதேவேளை,அங்கு அவர்களுக்கு புகைபிடிப்பதை கைவிடுவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment